மேலும்

சுவிசில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவேந்தல்  

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு,  கடந்த சனிக்கிழமை சுவிஸ் – சப்ஹவுசன் நகரில் நடைபெற்றது.

சிவராம் ஞாபகார்த்த மன்றம் மற்றும் சுவிஸ் விசன் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களான ஞா. குகநாதன், கனகரவி, க. அமரதாஸ், கிருஸ்ணா அம்பலவாணர் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

நினைவு நாளை முன்னிட்டு, நினைவுடன் பேசுதல்  என்ற பெயரிலான நினைவு மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகள் ஏட்டின்  முன்னாள் ஆசிரியர் ரவி முதற் பிரதியை வழங்க, பிரேமினி அற்புதராஜா பெற்றுக் கொண்டார்.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியமூர்த்தியின் நண்பர்களான இ. பாலமுருகன், சு. இராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *