மேலும்

மாதம்: January 2019

இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்

இன்றைய உலகம்,  அரசியல், பொருளியல் கொள்கை, தீர்மானங்கள் குறித்த விவகாரங்களை,  தெளிவாக கணித வழிமூலம் கையாளும் தன்மை கொண்டது. பல்வேறு கொள்கைகள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்படுகிறது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுனரைச் சந்தித்தார் முன்னாள் முதல்வர் விக்கி

வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை – புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவினால் தடுக்க முடியாது – கோத்தா

இரட்டைக் குடியுரிமை தனது தனிப்பட்ட விவகாரம் என்றும், தனிநபரின் உரிமைகளை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர்  எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது.

ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல் – முன்னாள் புலிகளுக்கு சிறைத்தண்டனை

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.