மேலும்

வடக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளினதும், விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த மாதம் மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையிலேயே சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வடக்கில் மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *