நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை, கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக, நாலக டி சில்வா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து, தெகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மேற்படி படுகொலைச் சதித் திட்டம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்காக, நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளார்.