மேலும்

இந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

இதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *