மேலும்

மாதம்: August 2018

பொருளாதார வளர்ச்சி 4 வீதத்தைத் தாண்டாது – மத்திய வங்கியின் கணிப்பு பிசகியது

2018ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4 வீதத்துக்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.

சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சிறிலங்கா ஒரு பில்லியன் டொலர் கடன்  பெற்றுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலாலிக்கு விமான சேவை – இந்திய விமான நிறுவனங்களுடன் பேச்சு

தென்னிந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமான சேவைகளை நடத்தக் கூடிய விமான நிறுவனங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இலக்கை அடைய ஆதரவு – சீன கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக மாறும் இலக்கை, சிறிலங்கா அடைவதற்கு, ஆதரவு அளிக்கப்படும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் – எந்தக் குழப்பமும் வராது என்கிறார் மாவை

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

விஜயகலாவுக்கு எதிரான விசாரணை நிறைவு – சட்டமா அதிபருக்கு அறிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.