சிறிலங்கா இலக்கை அடைய ஆதரவு – சீன கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக மாறும் இலக்கை, சிறிலங்கா அடைவதற்கு, ஆதரவு அளிக்கப்படும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின், அனைத்துலக திணைக்கள உதவி அமைச்சர் கோ யேசோ நேற்று சிறிலங்கா பிரதமரை ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும், கோ யேசோவும் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடினர்.