கடும் வரட்சியின் பிடியில் கிளிநொச்சி மாவட்டம்
கடுமையான வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி ஆகிய பிரிவுகள் வரட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு 24,100 குடும்பங்களைச் சேர்ந்த, 82,000 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியினால், கிணறுகளில் நீர் வற்றி குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கிளிநாச்சி, தர்மபுரம், புளியம்பொக்கணை, கல்லாறு பகுதிகளில் உள்ள குளங்கள், கால்வாய்கள் வறண்டுள்ளன. இதனால் கால்நடைகள் குடிநீரின்றி அலைகின்றன.
இதனால் யானைகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி குடிநீருக்காக வரத் தொடங்கியுள்ளதுடன், நெல் வயல்களையும் நாசப்படுத்துகின்றன.
வரட்சியினால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.