மேலும்

நள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

மூன்று நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இவர் இந்தப் பயணத்தின் போது, சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் செல்லவுள்ளார்.

அத்துடன் கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களையும் பார்வையிடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *