கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்
பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான காஷ்மீர் நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
நாளை தொடக்கம், எதிர்வரும் 16ஆம் நாள் வரை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.
94 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பல், நவீன போர்த்தளபாடங்கள் மற்றும் கண்காணிப்பு, தொலைத்தொடர்பு கருவிகளைக் கொண்டது.
சிறிலங்கா, பாகிஸ்தான் இடையிலான இராஜதந்திர,இராணுவ உறவுகளின் நெருக்கத்தின் ஒரு கட்டமாக இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.