பிரதி சபாநாயகராக ஆனந்த குமரசிறி தெரிவு – தோல்வியுற்றார் சுதர்சினி
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்திய ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து, கூட்டு எதிரணியின் ஆதரவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளே 53 வாக்குகளை மாத்திரம் பெற்றார்.