மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு அரசின் பங்காளி கட்சிகள் போட்டி

பிரதி சபாநாயகர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும், போட்டியில் இறங்கியுள்ளன.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் தெரிவு குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.

இதன் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரை, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்மொழிந்தார்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில், சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிவதாக, எஸ்.பி திசநாயக்க அறிவித்தார்.

இதையடுத்து, சபாநாயகர், இரகசிய வாக்கெடுப்பு நடத்த அதிகாரிகளை பணித்தார்.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *