மேலும்

ரணிலைக் காப்பாற்ற வேண்டாம்- சம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசர கடிதம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தனுக்கு அத்துரலிய ரத்தன தேரர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

”நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினதும் கரிசனைகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.

மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும், ரணில் விக்கிமசிங்கவுக்கு, ஆதரவளித்தால் அது உங்களின் கட்சியின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *