மேலும்

சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம்

சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில், சீனத் தூதுவர் செங் ஷியுவான், வரவேற்பு உபசாரம் ஒன்றை அளித்தார்.

அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், சீனாவின் பீஜிங் நகருக்கும், குவாங்டோங் மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

கன்ரன், சென்ஷென், ஹுய்சோ நகரங்களுக்கும், துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், இவர்கள் சென்று பார்வையிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *