மேலும்

புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர்

maithri-welcome-delhiசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக இன்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார். நாளை ஆரம்பமாகும் அனைத்துலக சூரிய சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்குப் பகுதிக்கான செயல் ருசிகன் சியாம், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோர் வரவேற்றனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் புதுடெல்லிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

maithri-welcome-delhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *