மேலும்

பசிலை சந்தித்த ஐ.நா உயர் அதிகாரி – ராஜபக்சக்கள் மீது திரும்பும் அனைத்துலக கவனம்

mahinda-rajapaksa-basil-rajapaksaசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர்  ,சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அரசியல் விவகாரங்களுக்கான உதவித் தூதுவர் ஜெப்ரி பெல்ட்மனுடன் கொழும்பு வந்துள்ள, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான, தலைவர்  மேரி யமாசிட்டா, நேற்று முன்தினம் பசில் ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது தற்போதைய அரசியல் போக்குகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் தொடர்புகளைப் பேண அனைத்துலக சமூகம், ஆர்வம் காட்டுகிறது என்பதையே இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய ஒற்றுமை அரசாங்கம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இப்போது தேசிய ஒற்றுமை அரசாங்கம் என ஒன்று இல்லை என்று அவரிடம் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *