மேலும்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி

mahindaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் நாளுக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் நாங்கள் ஒன்று கூடவுள்ளோம். அதன் பின்னர் தான் அடுத்து என்ன நடவடிக்கை என்று முடிவு செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் நாள் தொடர்பாக இன்னமும் நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், அதுபற்றி விவாதிப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *