மேலும்

பிரிகேடியர் பிரியங்கவை இடைநிறுத்திய அதிகாரிகளை கண்டித்த சிறிலங்கா அதிபர்

maithriலண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட காணொளி வெளியானதை அடுத்து, பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த உத்தரவை நேற்று ரத்துச் செய்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் உடனடியாக பணியில் இணைந்து கொள்ளுமாறும் அறிவித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அவர் எழுத்துமூலம் தனது உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரிகேடியர் பிரியங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எரிச்சலடைந்தார் என்றும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை கண்டித்துள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணி இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தம்முடன் கலந்தாலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அதிபதை தலையிடுமாறு முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேற்குலகையும், புலம்பெயர் தமிழர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட்டுள்ளதால், அவசரமாகத் தலையீடு செய்யுமாறு தாம் சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை விடுத்ததை விஜேதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *