மேலும்

2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிகிறது மைத்திரியின் பதவிக்காலம் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Supreme Courtசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிவுக்கு வரும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய, உச்சநீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, சிறிலங்கா அதிபர் பதவியில் ஐந்து ஆண்டுகளே மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *