மேலும்

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு- மாநில அதிகாரிகளிடையே பதற்றம்

Sri-Lankan-Tamil-refugeesதமிழ்நாட்டில்  ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கபுரம் அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அவர்கள் முகாமில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, மத்திய அரச அதிகாரிகளிடம் அகதிகள் சில மனுக்களை கையளித்துள்ளனர்.

தமது உடைமைகளுடன் தாயகம் திரும்புவதற்கு, மத்திய அரசாங்கம் கப்பல் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் என்று அகதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாயகம் திரும்பும் அகதிகள், தாம் புலம்பெயர்வதற்கு முன்பு அனுபவித்த வாழ்வாதார உரிமைகள் மற்றும் வசதிகள் மீளக் கிடைப்பதை இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அகதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு முறையான கழிப்பிட, வீதி, மின்சார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *