மேலும்

மைத்திரியும் ரணிலும் இன்று சிறப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்

ranil-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று தனித்தனியாக சிறப்பு அறிக்கைகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று ஊடகங்களில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

இதுகுறித்து, நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிகோத்தாவில் இன்று நடக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐதேக வேட்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மத்தியிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *