மேலும்

படங்களைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை – மகிந்த

mahinda-trinco (1)உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேட்சைக்குழுவோ, சுவரொட்டிகள், பதாதைகளில் தமது படத்தைப் பயன்படுத்துவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தமது படத்தை சுவரொட்டிகள், பதாதைகளில் பயன்படுத்தி வருவதை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் சட்டத்தை மீறி எவரேனும், தனது படங்களை பயன்படுத்தி பரப்புரைகளைச் செய்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்த விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *