மேலும்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்

jaffna-university-protest (1)அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்லைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள் என, பல்கலைக்கழக சமூகத்தினர் இணைந்து நேற்றுக் காலை ஆரம்பித்த இந்தப் போராட்டத்தினால், பல்கலைக்கழகச் செயற்பாடுகள் முற்றாக முடங்கின.

பல்கலைக்கழக வாயில்கள் அனைத்தையும், மூடி தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், காலவரையறையின்றித் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

jaffna-university-protest (1)

jaffna-university-protest (2)

  • அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளையும் மீளவும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
  • அரசியல் கைதிகளையும் தனியான சிறைக் கூடங்களில் வைக்க வேண்டும்.
  • சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
  • ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
  • புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்குச் சிறந்த வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே இந்தக் காலவரையற்ற  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக பணியாளர்  சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *