மேலும்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது வழிகாட்டல் குழுவின் அறிக்கை

sri lanka parliamentஅரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டல் குழுவின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடாளுமன்றத்தில் இந்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

அரசியலமைப்பை உருவாக்குவதற்காக வழிகாட்டல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு, கருத்துக்களைப் பெற்று, அரசியலமைப்பு வரைவு ஒன்று தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *