‘தமிழர் தளம்’ – தாயகத்தில் இருந்து வெளிவரும் புதிய ‘மாதமிருமுறை இதழ்’
தமிழர் தளம் எனும் பெயரில் தாயகத்திலிருந்து புதிய ‘மாதமிருமுறை இதழ்’ வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது இதழ், கடந்த 20.08.17 அன்று நல்லூர் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தளம் இதழை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் படித்ததாக கூறப்படுகிறது.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழர் தளம் இதழ் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
இது தொடர்ச்சியாக தாயத்திலும் உலகம் முழுவதும் மாதமிருமுறை இதழாக வெளிவரவுள்ளதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார வாழ்வியல் சார்ந்த பிரக்ஞைபூர்வமான பார்வையும், பிராந்திய, சர்வதேச நிலைமைகள் மீதான காத்திரமான பிரதிபலிப்பாகவும் முன்னறிப்புகளையும் பிரதிபலிக்கும் இதழாக மிளிருமெனவும் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.