இலட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரேறி வந்த நல்லைக் கந்தன் (படங்கள்)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 7 மணியளவில் தேர்த் திருவிழா ஆரம்பமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க, இல்ஙகைத் தீவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் பெருமளவு புலம் பெயர் தமிழர்களும் இந்த திருவிழாவுக்காக வந்திருந்ததைக் காண முடிந்தது.
நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவம் தமிழ் தாயகத்தில் ஒரு பண்பாட்டு விழாவாக போற்றப்படுகின்ற நிலையில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் இன்று தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவில் மக்களின் நம்பிக்கை, பக்தி என்பனவற்றைக் காணும் போது, தாம் பெரும் வியப்படைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருவிழாவில் இம்முறை வெளிநாட்டவர்களும் அதிகளவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் – நன்றியுடன் மயூரப்பிரியன் மற்றும் முகநூல் நட்புகள்