மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை கூட்டமைப்பு ஆதரிக்காது – சுமந்திரன்

sumanthiranஅரசாங்கத்தினால்  முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவில்லை.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த சட்டவரைவு தொடர்பாக குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகளுடன் தீவிரமான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம், சிறிலங்கா அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

ஏனைய கட்சிகளின் ஒப்புதலுடன், இந்த சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக நிச்சயம் வாக்களிக்கும்.

மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக மாத்திரமே இந்த சட்டத் திருத்த வரைவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது”  என்றும் அவர் கூறினார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *