மேலும்

ரவி கருணாநாயக்கவின் நிலை – முடிவை ரணில் அறிவிப்பார்

ravi-karunanayakeமத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக, சிறிலங்கா அதிபரும், பிரதமரும் முடிவெடுப்பார்கள் என்று ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

‘ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முடிவுக்காக கட்சி உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர்.

ரவி கருணாநாயக்கவை அமைச்சரவையில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கலந்துரையாடி வருகின்றனர்.

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று ஐதேக உறுப்பினர்கள் பலரும் கருதுகின்றனர். இறுதி முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தின் பெயரை காப்பாற்றுவதற்காக ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலரும், இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *