வடக்கு மாகாணசபையில் ஊழல் நடக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபையில் நிதி ஊழல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
விசாரணைக் குழுவின் அறிக்கையில், அமைச்சர்கள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
“இதில் சில திருத்தங்கள் உள்ளன. நிதி மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தாலும், அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை.
என்ன நடந்தது என்றால், பணியகத்தை நடத்துதல் மற்றும், கூட்டங்களின் போது அதிகளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. அங்கு நிதி ஊழல் இடம்பெறவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.