மேலும்

11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் மற்றொரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

sl-navyமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் 5 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தங்காலை ருகுணு கடற்படை முகாமில் பணியாற்றிய மற்றொரு கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை 10 மணியளவில்,  குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான,  குறித்த கடற்படைச் சிப்பாயிடம், இரவு 8 மணி வரையாக – சுமார்  10 மணி நேரத்துக்கும்  மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்தே அவர்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *