மேலும்

கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி

cmகறுப்பாடுகள் எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மக்கள் தமது மனோநிலையை எடுத்துக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகிறேன்.

அதேவேளை, அவர்களாகவோ அதற்குள்ளிருக்கும் சில கறுப்பாடுகளோ, எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களானால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

அதனால், அவர்கள் ஆளுனரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக் கொண்டால் மக்களை நாம் அமைதிப்படுத்த முடியும்.

அதேவேளை மக்களும் அளவுக்கு மீறிச் சென்று தமது மனநிலையை வெளிப்படுத்த முனையக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், சில கறுப்பாடுகள் செய்யக்கூடும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    வடக்கு மாகாணசபையைக் கலைத்தால் தான் அடங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *