மேலும்

வைகோ புலிகள் இயக்க உறுப்பினராம் – திருப்பி அனுப்பியது மலேசியா

vaikoதமிழ்நாட்டின் மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று கூறியே அவருக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வைகோவிடம், பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மலேசியாவுக்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வைகோ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், ஆபத்தானவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்ததாக, கூறப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள, மலேசியாவின் பினாங் மாநில பிரதி முதல்வர் ராமசாமியின், மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காகவே வைகோ மலேசியா சென்றிருந்தார்.

மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வைகோ இன்று சென்னைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *