மேலும்

சிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடமில்லை – ரவி கருணாநாயக்க

Ravi-Karunanayakeஎந்த நாட்டினது தாக்குதல் ஆயுதங்களும் சிறிலங்காவின் எல்லைக்குள் அனுமதிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பயணத்தின் முடிவில் நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு சீன நீர்மூழ்கிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

“கப்பற் பாதைகள் என்ற வகைக்குள், கடற்படை மற்றும் தாக்குதல் ஆயுதங்களை உள்ளடக்க முடியாது. சிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்கள் வரவேற்கப்படாது.  நாம் எந்தவொரு நாட்டையும் குறிவைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *