மேலும்

மோடியின் பயணத்தின் போது உடன்பாடுகள் கையெழுத்திடப்படாது – சிறிலங்கா அதிபர்

maithri-modi-goa-1இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வெசாக் வார நிகழ்வில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நாட்டின் சில பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக பொய்யான தகவல்களைப் பரப்பி, அனைத்துலக சமூகத்துடன் வளர்த்து வருகின்ற நல்லுறவை நாசப்படுத்த இந்த சக்திகள் முயற்சிக்கின்றன.

அவ்வாறு எந்த உடன்பாடும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது கையெழுத்திடப்படாது. அவரது பயணம் சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கானதே.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *