கொலன்னாவ குப்பைமேடு சரிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயின.
புதைந்து போன வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.
அதேவேளை, இன்னமும் சுமார் 20 பேர் வரையில் குப்பை மேட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும், காணாமல் போயுள்ளவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை.
இந்தநிலையில் சிறிலங்கா இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.