மேலும்

அம்பாந்தோட்டை விவகாரத்தினால் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்

cabinetஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும், ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் இடையிலேயே இந்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் இயக்கும் வகையில், அதனுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்துக்குள் நிலவுகின்ற எதிர்ப்புகளால் இந்த உடன்பாடு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இது ஐதேகவினால் அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கம் ஒன்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு வரையப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், அதன் இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *