மேலும்

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உயர்மட்ட ஆலோசகர்

Yu Zhengsheng -ranil (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சீன அரசியல் உயர் மட்ட அரசியல் ஆலோசகரான யூ செங் ஷெங்குடன் வந்திருந்த உயர் அதிகாரிகள் குழுவும்  இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தது.

Yu Zhengsheng -ranil (1)Yu Zhengsheng -ranil (2)

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க, டி.எம்.சுவாமிநாதன், ஏரான் விக்கிரமரத்ன, அனோமா கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *