யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தன
யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாகிய யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம் பெயர் தமிழர் ஒருவரால், யாழ். பொது நூலகத்துக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் என்ற பெயர் தோன்றக் காரணமான யாழ். இசைக்கருவிகள் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் எங்குமே இருக்கவில்லை.
இந்த நிலையில், நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் கந்தமூர்த்தி கலாறெஜி என்பவர், இரண்டு யாழ். இசைக்கருவிகளை யாழ்ப்பாணத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த யாழ். இசைக்கருவிகளில் ஒன்று யாழ் பொதுநூலகத்துக்கும், மற்றொன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.