மேலும்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

jaffna-dsயாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *