மேலும்

31 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

Yun Byung-seதென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடைசியாக 1986ஆம் ஆண்டு, தென்கொரிய வெளிவிவகார அமைச்சராக இருந்த லீ வொன் யுங் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் நாளை மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் மூலம் சிறிலங்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு என்பன வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *