மேலும்

சிறிலங்காவின் பாதுகாப்புச் சவால்கள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கம்

USA-SriLanka-Flagஅமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இளம் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினர்  சிறிலங்கா தேசிய பாதுகாப்புக் கற்கைகளுக்கான நிறுவகத்துக்குச் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு “அடுத்த பத்தாண்டுகளில் சிறிலங்காவின் பாதுகாப்புச் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தேசிய பாதுகாப்புக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் ஆலோசனைச் சபை உறுப்பினர்களான அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் இந்த விளக்கவுரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *