மேலும்

சாவகச்சேரி கோர விபத்தில் 10 பேர் பலி – 20 பேர் காயம்

chavakachcheri-accident-2சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், தென்னிலங்கையில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரை சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

மாதம்பேயில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வான், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சாவகச்சேரி, சங்கத்தானை தொடருந்து நிலையத்துக்கு எதிரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது.

chavakachcheri-accident-1chavakachcheri-accident-2chavakachcheri-accident-3chavakachcheri-accident-4chavakachcheri-accident-5இந்த விபத்தில், வானில் பயணம் செய்த 4 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். அதேவேளை, பேருந்தில் பயணம் செய்த 17 பயணிகளும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி, யாழ்.போதனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *