சிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு
ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணமாக வருகை தரும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபருடன் மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோலாலம்பூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.
ரஷ்யா அதிபரின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த மூன்று மாதங்களுக்குள் மொஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.