இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கையெழுத்திட்டது சிறிலங்கா
இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் (Open Skies Agreement) சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இந்தியாவின் ஆறு மெட்ரோ விமான நிலையங்களுக்கு சிறிலங்காவினால் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுக்கே கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள இந்த உடன்பாடு இடமளிக்கும்.
106 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கில், 17 நாடுகளுடன் திறந்த வான் உடன்பாட்டை மேற்கொள்வது குறித்து இந்தியா பேச்சுக்களை நடத்தியிருந்தது.
சிறிலங்கா உள்ளிட்ட 12 நாடுகளுடன் இதுகுறித்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.