மேலும்

காலி கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

galle_dialogue_2016-1சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கடற்படை நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, காலி கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள கோல்பேஸ் விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏழாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கு, இம்முறை “மூலோபாய கடல்சார் ஒத்துழைப்பை வளர்த்தல்” ‘Fostering Strategic Maritime Partnerships’ என்ற தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்களில் ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த, 120 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

galle_dialogue_2016-1

galle_dialogue_2016-2

 

galle_dialogue_2016-3galle_dialogue_2016-4சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளின் தளபதிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இன்றைய கருத்தரங்கில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் சிறப்பு உரை நிகழ்த்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *