மேலும்

காணாமற்போனோர் செயலகம் ஜனவரி 1 இல் செயற்படத் தொடங்கும்

mangala-unhrcகாணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதும், இந்தச் செயலகம் இயங்கத் தொடங்கும்.

இந்தச் செயலகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவை நியமிக்கும்.

அதேவேளை, உண்மை கண்டறியும் பொறிமுறை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆலோசனைச் செயலணி, சிறிலங்கா அதிபரிடம் முன்வைக்கும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *