உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பார் மைத்திரி – இந்தியா நம்பிக்கை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்றும், நாளையும் இந்தியாவில் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, உஜ்ஜெயினில் நகரில், சிம்ஹஸ்தா கும்பமேளாவின், ஒரு பகுதியாக நடக்கும், வைச்சாரிக் மகா கும்பமேளாவில், சிறிலங்கா அதிபர் நாளை உரையாற்றுவார்.
அத்துடன் சாஞ்சி செல்லும் அவர், உலகப் புகழ்பெற்ற சாஞ்சி தாதுகோபத்துக்குச் சென்று, சிறிலங்கா மகாபோதி சமூகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் பங்கேற்பதுடன், அநகாரிக தர்மபாலவின் உருவச்சிலையையும் திறந்து வைப்பார்.
சிறிலங்கா அதிபர் இன்று புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, அவரைக் கௌரவித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராப்போசன விருந்து வழங்குவார்.
இந்தப் பயணத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பையும் உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்பார் என்று நாம் நம்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை உறவு வலுவடையட்டும் ஆனால் எம்மக்களின் பொருளாதாரமும் வலுவடையவேண்டும்