மேலும்

சிறிலங்கா கடற்படையில் இருந்து லெப்.யோசித ராஜபக்ச இடைநிறுத்தம்

Yoshitha-Rajapaksaநிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், நேற்று- பெப்ரவரி 28ஆம் நாளில் இருந்து லெப்.யோசித ராஜபக்சவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக, சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே, விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு வசதியாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை வழங்கியிருந்தது.

லெப்.யோசித ராஜபக்சவின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் உடனடியாக இடைநி்றுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி, அவர் எந்தவொரு கடற்படைத் தளப் பிரதேசத்துக்குள்ளேயும் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார் என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *