மேலும்

சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் இன்று சீனாவுக்குப் பயணம்

Srilanka-chinaசிறிலங்காவின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் தென்மாகாண அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய இருவருமே, சீனாவுக்கு இன்று பயணமாகவுள்ளனர்.

இவர்கள், சீன அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, சீன அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர்.

வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கு முன்னோடியாகவே, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு முக்கிய அமைச்சர்களை பீஜிங் அனுப்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *