மேலும்

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் காயம்

indrarasa-npcதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா வவுனியாவில் நேற்றிரவு இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலில் காயமடைந்தார்.

வவுனியா, உக்கிளாங்குளத்தில், மரணச்சடங்கு ஒன்றில் பங்குபற்றி விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

மற்றொரு மாகாணசபை உறுப்பினருடன், உந்துருளியில் வந்து கொண்டிருந்த போது, பின்ஆசனத்தில் அமர்ந்திருந்த இந்திரராசா மீது, மற்றொரு உந்துருளியில் பின்தொடர்ந்து வந்தவர்கள், இரும்புச்சட்டம் ஒன்றினால் தாக்கினார்.

இதனால் காயமடைந்த மாகாணசபை உறுப்பினர், இந்திரராசா, சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு கருத்து “இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் காயம்”

  1. Sumathri Francis
    Sumathri Francis says:

    இவர் எனது பல்கலைக்கழக நண்பர். விரைவில் நலம்பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *